Friday, March 11, 2011

22. காஞ்சிகோயில் நாடு:

வானியாற்றினுக்குத் தெற்குள்ள வானியாற்றின் நீர்பிடிப்புப்பகுதிகள்.


தீரன் சின்னமளியுடன் துணை நின்ற குமார வெள்ளை வம்சத்தினர்:
https://archive.org/stream/SouthIndianRebellion/South%20Indian%20Rebellion#page/n115/mode/2up



https://archive.org/details/journeyfrommadra02hami/page/214


தூந்தாஜி வாக், சின்னமலை ஆகியோரது குழுவின் பட்டக்காரர்களையும்,அவர்களுக்கு உறுதுணையாக இருந்த வெள்ளாளர்களை Military Sudra! Ruffians! திருடர்கள் என்றெல்லாம் சொல்லும் கிழக்கிந்திய கம்பெனி பிரீமேசானிய திருடன்.



காஞ்சிகோயில் செம்ப கோத்திரத்தார் முதல் நாட்டார் (கவுந்தப்பாடி செட்டிபாளையத்தார் - நடுக்காளிபாளையம் பொன்னுசாமிக் கவுண்டர்).



இரண்டாம் பட்டம்:
மொளசி கன்ன கோத்திரத்தார் (எளையாம்பாளையத்தார்). 
இவர்கள் அக்கரை நாட்டார்கள்செம்ப கோத்திர முதல் நாட்டாருக்கு மாப்பிளையாக வந்தவர்கள்இளைய பெருமாள் இவர்களது தெய்வமாதலால் எளையாம்பாளையம் என்று பெயரிட்டனர்இன்றும் 
காஞ்சிக்கோயில் சீதேவியம்மன் கோயிலில்  இரண்டாம் திருநீர் பெற்று வருகின்றனர்.



மூன்றாம் பட்டம்: 
காஞ்சிக்கோயில் கன்ன கோத்திரத்தார் (பெத்தாம்பாளையத்தார்)






                                        ஸ்ரீமான் பொன்னுசாமி கவுண்டர் 
செட்டிபாளையத்தாரில் சித்திரமேழி பெரிய நாட்டார்
பூந்துறை, அறைய நாட்டாரில் தீர்த்தகிரி சர்க்கரை உத்தமகாமிண்ட மன்றாடியார் (தீரன் சின்னமலை)  உறவினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு ஆதரவளித்து, காஞ்சிக்கோயில் செம்பாவங்கியூரிலிருந்து  செட்டிபாளையத்திற்கு அடித்துத் துரத்தப்பட்டவர்கள்.
https://archive.org/stream/SouthIndianRebellion/South%20Indian%20Rebellion#page/n115/mode/2up

காஞ்சிக்கோயில் செம்ப கோத்திர நாட்டாரது அரண்மனை சுவர்

காஞ்சிகோயில் சீதேவியம்மன் பந்தடி (ஓலைச்சுவடி)


நல்ல கணபதியை நாம் காலமே தொழுதால்
அல்லல்வினையெல்லாம் அகலுமே சொல்லரியதும்பிக்கை யோனைத் தொழுதால் வினைதீரும்நம்பிக்கை யுண்டே நமக்கு

காப்பு 

பூமலரும் காஞ்சிநகர் புகழ்பெறு சீதேவியின்மேற் 
பாவாணர் பந்தடியைப் பாடுதற்கு - நாமகளும் 
கருத்திளிருந்துதவி கந்தனுக்கு முன்பிறந்தோன் 
கருணை மதியுடையோன் காப்பு 

 பந்தடி

          சீர்பெருகும் அன்ன வாவி
                     செழிக்கும் தளைஞ்ச நல்லூரில்
          சிந்தைமகிழும் குங்கும நல்லூர்
                      செய்தங் காஞ்சி நகரினில்
           நீர்பெருகும்  தெர்ப்பை   வாவி
                       நீண்ட தெற்கு அரசுடன்
           நிசம தாக  வடதுரமதில்
                     நீராம்  நரியங்  குளமுடன் 1

           மேருதவிய கனக கிரியும்
                      மிக்க  தேவர்  வாழ்கவே
           மேவுசீதேவி வல்லி  உமையாள்
                       மீதில் பந்தடி  பாடவே
            காருலாவிய மேனி  யுடைய
                      கணபதி  முன்  நிற்கவே
             கருணை   மாலும்    சிவசமய
                      பண்டித குருமுன்னே நிற்கவே 2


     செங்கை  வளையல்  அசையவே
                திருமு   கங்களும் வேர்க்கவே
      சேஷன்  முடியும்  பாரமலையும்
               திடுதி டென்று   அதிரவே
        தங்க மார்பில் பதக்கம்மின்ன
               தரணி மீதில் துலங்கவே
         தண்டை அசைய கெண்டைவிழிகள்
                   தானும் ஆடிச் சுழலவே 3

         பொங்கர மான அரவடமணி
                   பூஷ  ணங்களும் குலுங்கவே
         போதும்போதும் என்று தோழிகள்
                    பொன்ன டிகளைப் பணியவே
           சிங்கார மான டெக்கைதுந்துமி
                   திமிதிமி யென்று முழங்கவே
            செல்வம் உடைய சீதேவியம்மன்
                    செழிக்கும்  பந்துமொன் றடிப்பளே 4

     தண்டை  அசையச்  சிலம்புலம்பத்
              தரணி  தன்னில்   சதங்கைகள்
      தன்னதான என்று அம்மன்
               தாளில் மணிகள் கொஞ்சவே
       எண்டி  சையோர் பணியும்பாதம்
                  எடுத்த அடிகள் வைப்பதும்
         ஏவல்  செய்யும்  கூளிசாதகம்
                  இணை யடிகள் பணியவும் 5

          பண்டு  மறையோர்  வேதம்ஓத
                  பலச  னங்களும்  போற்றவே
           பரிவாய் முனிவ   ரவர்கள்சூழ
                     பரிச னங்களும் துதிக்கவே
            அண்டர்    கூடிக்   ககனமீதில்
                     அர்ச்ச னைகள் செய்யவே
             ஆயி உமையாள் சீதேவியம்மன்
                     அழகாய்ப் பந்துரண் டடிப்பளே 6


                   தங்க       மான     முடிகள்மீதில்
                                        தரித்த பிரைகள் மின்னவே
        சர்க்குண  மதன நேசர்
                 சார்ந்து குடைகள் பிடிக்கவே
        மங்கல    மான    வானிருளும்
                 வழிகள்  தப்பி  நடுங்கவே
        மாலை ஆரம்  குழல்கள் சரிந்து
                மானி லமதில்    அஞ்சவே 7

         திங்கள்  தன்னை  மாற்றும்அந்த
                 சிறந்த குழையில் ஓலைகள்
          திகுதிகு என்னப் பிரவைகாட்டத்
                    தேவி மூக்குத்  தழுக்குடன்
          கொங்கை  தன்னில்   தங்கநகைகள்
                    குடம ணிகள் ஆடவே
          கோதை  சீதேவி  வல்லிஉமையாள்
                   குலுங்கப் பந்துமூன்  றடிப்பளே 8

       பன்னு  மறையோர் ஓதும்முனிவர்
                    பாவ  லர்சிலர்  சூழவே
       பாரில் தாள்கள்  எங்கும் ஓடிப்
                    பகலும் பகல தாகவே
       மின்னும் இடைகள் துவளவேஅம்மன்
                   வீர சுட்டிகள் அசையவே
        வெண்தரள   மாலை மார்பில்
                   வித விதமாய் இலங்கவே 9

         தன்ன    தான    என்றுகூடி
                  சதங்கை கொஞ்சித் துலங்கவே
          சண்மு கவரும் தென்பதியரும்
                   சரணம் சரணம் என்னவே
          முன்னு   மாமதி  வேதநாயகி
                 முக்கண்  ணுடைய சர்க்குணி
          முகுந்தன்   துணைவி  ஆதிநாயகி
                  மூர்த்தி  நான்குபந்  தடிப்பளே 10

      மனுமயன் என்னும் சிற்பிதன்னை
                வரவ ழைத்துப் பார்த்துமே
      வரவுசெலவு ரதத்தில் கண்டு
                வாகாய இருந்து செய்துமே
      கனத்த  தேரும்  திருத்தமாக
             கருணை   கொண்டு  செய்துமே
       காத லான  விசுவகர்மா
             கடுகி  முன்னே  நின்றுமே 11

       சனங்கள் வந்து வடங்கள்தொட்டு
                 சலுத்தாய்  இருத்து  வரவுமே
       சாய்ந்தி  டாமல் வுடலை கொடுத்து
                சன்னை போட்டு  திலும்புமே
        நினனவி டத்தை நோக்கிப்பார்த்து
                 நிமிசம் நிலையில் நின்றதே
        நீலி    காளி     சீதேவியம்மனும்
                 நிலத்தில் பந்தைந் தடிப்பளே 12

      குலகுரு சிவகிரி மடம் சிவசமய பண்டித குருசாமிகள்,
         காஞ்சிகொயில் நாட்டு பட்டக்கார கவுண்டர்கள் 
(செட்டிபாளையம் செம்பன், காஞ்சிகொயில் கண்ணன்)

    தேரு  தன்னில்    தேங்காய்உடைக்க
                   தேவ குருக்கள் அய்யரும்
        தெரிசித்த  அடியன்  செம்பகுலத்தில்
                  செட்டிபாளையம் கவுண்டரும்
        காரு பொழியும் காஞ்சிநகரில்
                  கண்ண குலத்தில்  உதித்தவர்
        காத லோடு முக்கண்ணுடைத்து 
                  கருத்தில் நிறுத்தி யாவரும் 13

பலபட்டறைகள் 

        பாரில்  இருக்கும்  பலபட்டறைக்கு
                  பாங்காயச்  சேதி சொல்லவும்
         பக்தியாகப் பூவும் போட்டுப்
                 பல ஜனங்களும் துதிக்கவே
         நேரு விருதா வளிகள்சொல்லி
                 நேமித்  தவரும் வந்ததும்
         நிலமை  யான சீதேவியம்மன்
                  நீதியாய் ஆறுபந் தடிப்பளே 14 

  காஞ்சிகோயில் நாட்டு கவுண்டர்கள் மற்றும் காணியாள வேடுவர் 

      பார தனி காஞ்சிநகரில்
                    பலுகும் பூமி பாலகர்
           பண்டு  நாளில்  செம்பகுலத்தார்
                     பக்த ரான சீலரும்
          காரணமுள்ள கண்ண  குலத்தார்
                  கதித்து இருக்கும் போதகர்
           காத லுடைய காணியாட்சி
                   கருது கின்ற வேடுவர் 15

பள்ளர் 

             வீர  மான  தொட்டம்பட்டி
                    வீற்றி  ருக்கும் பள்ளரும்
           மேன்மை  யான கரும்பு கொண்டு
                      வேள்வி செய்யும் குண்டத்தில்
            தரணி   தன்னில் யாரும்வந்து
                         சகல வாத்தி   யத்துடன்
             தருணம்  வன்னி   தனில்இறங்கி
                         தழைக்க  ஏழுபந்  தடிப்பளே 16
 செங்குந்தர் 
          ரதத்தில்  ஏறி அம்மன்இருக்க
               நடனம்  செய்யும்  கன்னிகள்
          ராக   தாள     மேளவாத்தியம்
               நடத்தும் ரம்பை மேனகை
         நிதமும்  பூசை  குறைவில்லாமல்
               நேர்த்தி  யாகச் செய்யவும்
          நிலமை தவறாச் செங்குந்தவரும்
                நீதிப் பட்டம் கட்டவும் 17

          பதன மாகப் பலபட்டரையும்
                   பாங்காய் வந்து நிற்கவும்
          பாரில்  மணியம்   தர்ம்மகர்த்தா
                    பட்சத்  துடனே  பார்க்கவும்
           நிதமும்  அருமை  நிலைபெயர்ந்து
                   நிலத்தில்  ரதத்தை  ஓட்டவும்
           நிர்மலி என்னும் சீதேவியம்மன்
                    நிலத்தில் பந்தெட்டு அடிப்பளே 18

         வீதி  தன்னில்  வந்துநின்று
                வீற்றி  ருக்கும் அம்மனும்
        வெகுச  னங்கள் பூசைசெய்யும்
                    வீரி  சூரி  அம்மனும்
         சோதி யான மாயன்தங்கை
                    சுரூப மான அம்மனும்
          துன்பம் நீக்கி இன்பமாக
                 சுகங்கொ டுக்கும் அம்மனும் 19

         ஆதி   யான   ரூபிசத்தி
                 அமர்ந்தி ருக்கும் அம்மனும்
         அருமை  யான முக்கண்ணனையும்
                   அளித்தி ருக்கும் அம்மனும்
         பாதி   உடலும்  ஈசனாகப்
                    பலுகு கின்ற அம்மனும்
          பார்வதி  யென்னும்  சீதேவியம்மனும்
                   பாரில் பந்தொன்ப தடிப்பளே 20

              பூர ணியின்   நீறணிந்து
                      போற்றி செய்யும் மாந்தர்க்கு
             பூலோ கத்தில் இருந்துவருகும்
                    பொய்யில் லாத  மாந்தர்க்கு
             நார ணியின்  மறைபுகழும்
                    நல்கு கின்ற சேயர்க்கு 
              நான்கு  பத்து  லோகத்திற்கு
                     நடத்தி வரும் வண்மைக்கு 21

               தாரணியும் அம்மன் வந்து
                       தழைக்கு கின்ற பாவலர்
               சகலஉயிரும் பிழைச்ச ஓங்க
                       தரணிதன்னில் இருப்பவள்
               காரணிந்து   காஞ்சி  நகரில்
                        காட்சி கொடுத்துக் காப்பவள்
               கருணை யான சீதேவியம்மன்
                        கதித்துப் பந்துபத் தடிப்பளே 22

           துதிகள்  செய்து   பந்தடிதனை
                    சுகமாய் அச்சில் இடவுமே
           துணையி ருந்து காத்துவருவேன்
                    துருசாய்த் தந்து பார்த்துமே
            கதிமை யாக மணியம்தர்ம
                    கர்த்த ரும்பணம் சேர்த்துமே
            கருணை  யாக   யாருமிதற்கு
                   காத  லுடன்கண்டு  தந்துமே 23

             பதியில்  இருக்கும்  பந்துவோடு
                     பலுகும்   யாரும்  பந்தமே
             பருகுமனது  நிலையில்  இருந்தால்
                     பட்சம்   வைத்துப்   பார்க்குமே
             விதியைப்    போல   நடக்குதென்று
                     விவேக மில்லான் சொல்லுமே
              வீரம் உள்ள சீதேவியம்மனும்
                      விதமாய்ப் பதினொன் றடிப்பளே 24


                                


காஞ்சிகோயில் நாடு ஊர்த்தொகை:


பெருந்துறை தாலுகாவிலுள்ள காஞ்சிகோயில் நாடு பகுதிகள்:


 கோபி தாலுகாவிலுள்ள காஞ்சிகோயில் நாட்டு பகுதி:
பவானி தாலுகாவிலுள்ள காஞ்சிகோயில் நாட்டு பகுதி:


No comments:

Post a Comment