24 நாடுகள் - பட்டக்காரர்கள் பட்டியல்

Friday, March 11, 2011

3. காங்கய நாடு:


காஞ்சிநதி (நொய்யல்) ஆன்பொருனை (அமராவதி, ஆம்ராந்து) ஆறுகளுக்கு இடைப்பட்ட நாடு காங்கய நாடு. இன்னாட்டில் மூன்று சமஸ்தானங்கள் உண்டு. காங்கய நாட்டுக்கு பெரிய பட்டம் காங்கயம் பல்லவராயர். பின்னர் காடையூர் காங்கயர் அவர்மூலம் ஆனூர் சர்க்கரை, வள்ளியறச்சல் தொண்டைமான்.

a. காடையூர்: காங்கயர்:
கருமாபுர பெறழந்தை கோத்திரத்து வாலிபன் காடையூர் சேட கோத்திரத்தாரது காணியை அடைந்து பெற்ற பட்டம். காடையூர் அருகே காங்கயம்பாளையத்தில் வம்சத்தார் உள்ளனர். காடையூர் பெறழந்தை முழுக்காத கோத்திரம்.பழையகோட்டை பயிரனுக்கு  1500இல் தங்களது மன்றாடியார்  பட்டத்தையும், காணியாளர் அந்தஸ்தையும்  கொடுத்தவர்கள்.

பங்கயச் செல்வி - காடையூர்

பாங்குறு சொக்கர் மதுரைமீ னாட்சிதென் பாண்டியன்றன் 
காங்கய மன்றாடி மைந்தனென் றேநற் கடகமுடி 
யோங்கிய காடை களுமுட்டி வென்றவ ளுத்தமிதான் 
மாங்குயில் பங்கயச் செல்வியும் வாழ்கொங்கு மண்டலமே.

     (கு - ரை) காங்கேய மன்றாடியர் என்பவர் காங்கேய நாட்டில் 
உள்ள காடையூரில் வாழ்ந்தவர். பொருள் தந்த குலத்தினர். இவர் 
மலயத்துவசன் எனும் பாண்டிய மன்னவனிடம் படைத்தலைவராய் இருந்து பல வெற்றிகளைத் தேடித் தந்து பாண்டியனால் அவனுக்கு உரிய கொடி, குடை, மாலை முதலிய சன்மானங்களைப் பெற்றவர். மற்றும் பாண்டியனிடம் இம்முடிப்பட்டமும் சங்கப் பலகையும் பெற்றவர். கொங்கு நாட்டில் பல ஊர்களுக்கு அதிகாரம் பெற்றவர். இவரைப் பற்றிய தனிப்பாடல்கள் பல.

"சீருலவும் மதுரையில் சொக்கேசர் மீனாட்சி 
     செயலருள் கிருபையதனால் 
 சிங்காச னாதிபதி அதிவீர பாண்டியன் 
     செங்கோல் செலுத்து மந்நாள் 
 சீரான காங்கயனன் னாட்டினிற் கீர்த்திபெறு 
     செயகொங்கு மன்றாடியார்."

(கம்பர் வாக்கியம்)

     முதலிக் காமிண்டன் - காங்கேய மன்றாடியின் குமாரன் முதலிக் 
காங்கேயன். அவன் சுந்தர பாண்டியனுக்குத் துணைவனாய் வாழ்ந்தவன். பாண்டியன் மேல் பகைகொண்ட ஒட்டிய தேசத்து வேந்தன் பாண்டியனுக்குத் துணைவனாகிய முதலிக் காங்கேயன் மேல் போருக்குப் படையெடுத்துக் கொண்டு வந்தான். அதனையறிந்த முதலிக்காங்கேயன் காடையூரில் வீற்றிருந்தருளும் காடேசுவருடைய பாகத்தில் விளங்கும் பங்கயச் செல்வியை வழிபட்டு அம்பிகையின் கோயில் தான் நெடுநாளாக 
வளர்த்துப் பழக்கி வைத்திருந்த வலியன் என்னும் காடைக் குருவிகளைத் திறந்து விட்டுப் பகைவனுடைய சேனைகளின் மேற் பறக்கும்படி செய்தான். அக்காடைகள் ஒட்டிய மன்னனது மிகுதியான யானை குதிரைகளின் கண்களையும் ஒட்டிய வீரருடைய கண்களையும் கொத்திப் பிடுங்கின.

     அதனால் ஒட்டிய வேந்தன் போர் செய்ய முடியாமல் தோல்வி 
அடைந்தான். முதலிக்காங்கேயன் ஒட்டியனாற் சிறைசெய்து கொணரப்பெற்ற வேந்தர் பலரையும் விடுவித்தான். போர் நிகழ்ந்த இடம் நட்டூர் என்பது. இதனையறிந்து பாண்டியன் மிகவும் மகிழ்ச்சியுற்றுக் கடக சூடாமணி (யானை) சங்கப்பலகை, ஆறுகாற்பீடம், புலித்தண்டை விருது, ரத்னமுடி ஆகியவற்றையும் கருமாபுரம் பழனைநல்லூர் முதலிய ஊரதிகாரங்களையும் 
முதலிக் காங்கேயனுக்கு வழங்கினான்.

"கொற்றவனு மினியசுந் தரவீரபாண்டியன் 
     கொங்குதா ராபுரத்தில் 
 கூறுமைம் பத்தாறு தேசத்தி லுள்ளவர்கள் 
     கொங்கிலுள துரைகளறிய 
 வெற்றிபுணை காங்கெயமன் றாடியென்றபிடேக 
     மேவிமணி முடிகள் பெற்றான் 
 கொற்கைநக ரரசுபுரி காண்டீப........................ 
     .................. காடைநகர் முதலிமன்றாடியே,

(முதலிக் காமிண்டன் முடிசூட்டுப் பாடல்)

"திடமருவு முருகவிழ்க் கொன்றையொடு பொற்சடை 
     சிறந்தநட் டூரர்பேரில் 
தெரியாம லொட்டியன் கரடமத கரியுடன் 
     திரண்டுவந் துற்றபொழுதில் 
வடிவனைய செவ்வரி படர்ந்தநற் காடைதான் 
     மருவலர் வெருவி நிற்க 
மதகரி செகுத்துமொன் னார்படை வதைத்திட 
     ............ ............ ............ ............ ............ 
பாண்டியன் கேட்டுமகிழ் பண்புபெற நின்னையும் 
     ................. வரிசை தந்தான் 
............ ............ முதலி மன்றாடிதான் 
     ............ அன்புடன் வரிசை பெற்றான்

                         (வழுதிநாட்டுக் காமிண்டன்)

............ ஒட்டியனை வெட்டித் தரங் கொண்டதால் 
     ............ ............ ............ ............ மெச்சி 
தவமிகுந்திடும் பெரிய காங்கயமன் றாடிக்குத் 
     தனியரசு சூட்டினாரே.

               (காங்கேய மன்றாடி முடிசூட்டிப் பாடல்)

காங்கேய மன்றாடியார் - காடையூர்

வெள்ளைநல் யானைக் துதிக்கையி னாற்புகழ் மீனவன்றன் 
தெள்ளிய சொக்கர் மதுரைமீ னாட்சி தெருவினிலே 
கள்ளனஞ் சோலை மலைவா ழழகருங் காங்கயற்கு 
வள்ளற் கடக முடிசூட்டு வார்கொங்கு மண்டலமே.

காங்கேய மன்றாடியின் புகழ்

அன்றாடி யீசன் றமிழ்புரி வாதுக் ககத்தியன்றன் 
கன்றாடி யீசன் பொருள்தந்த கோத்திரக் காங்கயனைச் 
சென்றாடி யீசன் பொதியனைச் சங்கமுஞ் செம்புருக்கும் 
மன்றாடி மன்றாடி யென்றோது மேகொங்கு மண்டலமே.

உண்மை பட்டக்காரரை துரத்திவிட்டு துரோகியாக இருந்த பங்காளியை வெள்ளைக்காரன் சீமை பழனி  துரோகி நாயக்கர் ஜமீனுக்கு துரத்தினார் சின்னமலை என்கிறது இத்துரோகியே கிழக்கிந்திய கம்பெனிக்கு போட்ட துரோக கடிதத்தின் கைபீது :































கைபீதின் தற்காலப் படி:






உண்மை வாரிசுகளின் விவரங்கள் தெரியவில்லை.


b. காங்கயம்பல்லவராயர்:

காங்கயம் பல்லவராயன்பாளையம் என்ற ஊரில் உண்மையான பட்டக்காரர் இருந்துள்ளார்.

அவரது பங்காளி முறையிலான புதூர் என்ற ஊரைச்சேர்ந்த அமராவதி என்பவர் இலுமினாட்டி பிரீமேசானிய கிழக்கிந்திய கம்பெனியின் கைப்பாவையாக மாறி உண்மையான பட்டக்காரரை வெள்ளோடு கொம்மகோயில் பகவதியம்மன் கோயில் என்ற ஊருக்கு துரத்தியடித்துவிட்டு டிப்பு சுல்தான் மற்றும் பழையகோட்டை தீர்த்தகிரி சர்க்கரை ய உத்தமக்காமிண்ட மன்றாடியாரை (தீரன் சின்னமலையை) காட்டிக்கொடுக்க முயற்சித்ததால்,சின்னமலையால் விரோதிகிருது  வருடம் (ஆங்கிலம் 1791) கார்த்திகை மாதம் அமர பட்சம் சஷ்டி திதியில் காங்கேயத்தில் வைத்து கொல்லப்பட்டார்.வாரிசு பழனி தொப்பம்பட்டி துரோகி நாயக்கர் ஜமீனின் ஆதரவில் ஒளிந்து கொண்டான்.

மீண்டும் பழையவர்கள் பல்லவராயன்பாளையத்தில் குடியமர்த்தப்பட்டனர்.1799இல் சின்னமலை கவுண்டர்,தனது சமையல்காரனான தாராபுரம் செலாம்பாளையம் பரஞ்சேர்வழி பயிர கோத்திரத்தவனான நல்லப்பனால் காட்டிக்கொடுக்கப்பட்டு ,தனது மைத்துனனான உலகபுரம் உலகுடையார் மற்றும்   ஓடாநிலைக்கு  எழுமாத்தூர்,நசியனூர் மற்றும் காஞ்சிக்கோயில் பட்டக்காரர்களால் ஆதரிக்கப்பட்டார். அச்சமயத்தில் மீண்டும் உண்மையான பல்லவராயன்பாளையம் பட்டக்காரர் மீண்டும் துரத்தியடிக்கப்பட்டார்.துரோகி புதூரான், கிழக்கிந்திய கம்பெனிக்கு எழுதிய துரோக கடிதத்தின் அசலும், நகலும் துரோகியின் கையொப்பத்துடன் ஆதாரமாக கீழே பதிப்பிக்கப்பட்டுள்ளது.

சின்னமலைக்கு ஓடாநிலை வேட்டுவரின் காணியாட்சி விலைக்கு பெறப்பட்டு பட்டறை அமைத்துக் கொடுக்கப்பட்டு 1804 வரை யுத்தத்தைத் தொடர்ந்தார்














இக் கைபீதின் தற்கால படி:








தற்பொழுது பல்லவராயன்பாளையம் என்ற ஊரில் வம்சத்தார் குடியுள்ளனர்காங்கயம் செங்கண்ண கோத்திரத்தார்.

பல்லவராயன் - காங்கேயம்

கோலாற் சிறுவர் சிவிகையி லேறநற் குஞ்சரந்தான் 
பாலான சோழன்றன் செய்தொடி யேசிங்கைப் பல்லவன்றன் 
காலாலே கீறிக் கரிசோழன் றன்னைக் கனிந்தவன்னை 
மாலான செங்கண் முடிசூட்டு வார்கொங்கு மண்டலமே.

     (கு - ரை) யானையினால் எடுத்துவரப்பெற்ற கரிகாற் சோழனுடைய முடிசூட்டுக் காலத்தில் காங்கேய நாட்டுப் பல்லவன் தன் காலாலே கோடு கீறச் செங்கண்ணர் குலத்தார் யாவரும் அவ்வெல்லைக்குள் நின்று சோழனுக்கு முடிசூட்டினர் என்பது வரலாறு. சிங்கை காங்கேயம். "மதியூகி சிற்றெழுந்தூர் சிங்கையம் பதியில் மதன செங்கண்ண குலமால்" (சிதம்பரப்பல்லவன் முடி சூட்டுப் பாடல்)

     காங்கேயம் பல்லவராயர் மரபில் வந்த சிதம்பரப் பல்லவன் 
என்பவன் ஒட்டியரை வென்று வெற்றி கொண்ட கொங்கு நாட்டுத் 
தலைவர்களில் ஒருவன்.

"திட்டமிகு மொட்டியனை வெட்டி விருதிட்டுமே 
     சிம்மா சனத்திருந்து 
சிரோரத்ன மகுடமும் ஆறுகாற் பீடமுயர் 
     தென்கடகு சூடாமணி 
திறல்வரிசை பெற்றிடும் விருது மகுடாசலன் 
     சிதம்பரம் பல்லவனுமே"

                                   (கம்பர் வாக்கியம்)



செங்கண்ணன் - காங்கேயம்

கார்கொடுத் தோன்மீன் கொடிகொடுத் தோன்றென் கடப்பமலர்த்
தார்கொடுத் தோன்றோட் டடங்கொடுத் தோன்மிகு தண்டமிழோர்க்
கூர்கொடுத் தோன்ற னுயிர்கொடுத்தோனின் றுதைக்கத்திரு
மார்கொடுத் தோன்செங் கணன்வாழ் திருக்கொங்கு மண்டலமே.



c. ஆனூர்: சர்க்கரை (1512-1545க்குப் பிற்காலம்) , வல்லியறச்சல்: தொண்டைமான்:
மூன்றாம் சமஸ்தானாதிபதி.
ஆனூர் பயிர கோத்திரத்தார்

தீர்த்தகிரி சர்க்கரை உத்தமகாமிண்ட மன்றாடியார் (தீரன் சின்னமலை, தம்பாக்கவுண்டன் என்றும் அழைக்கப்படுபவர்) இவ்வம்ச பட்டக்காரர்.

கிழக்கிந்திய கம்பெனியின் ரெவின்யூ (கொள்ளை) டிபார்ட்மென்ட் கடிதங்களின் தொகுப்புகளிலிருந்து  சரித்திர  பேராசிரியர் முனைவர் ராஜய்யன் (UPSC முன்னாள் உறுப்பினர்) அவர்களால் எழுதப்பட்டுள்ள ஆதாரப்பூர்வ புத்தகத்திலிருந்து:
https://archive.org/stream/SouthIndianRebellion/South%20Indian%20Rebellion#page/n115/mode/2up

https://archive.org/stream/SouthIndianRebellion/South%20Indian%20Rebellion#page/n113/mode/2up/search/chinnan+gour

https://archive.org/stream/SouthIndianRebellion/South%20Indian%20Rebellion#page/n115/mode/2up/search/chinnan+gour

https://archive.org/stream/SouthIndianRebellion/South%20Indian%20Rebellion#page/n117/mode/2up/search/chinnan+gour

https://archive.org/stream/SouthIndianRebellion/South%20Indian%20Rebellion#page/n141/mode/2up/search/chinnan+gour

https://archive.org/stream/SouthIndianRebellion/South%20Indian%20Rebellion#page/n147/mode/2up/search/chinnan+gour

https://archive.org/stream/SouthIndianRebellion/South%20Indian%20Rebellion#page/n313/mode/2up/search/chinnan+gour

https://archive.org/details/journeyfrommadra02hami/page/214


தூந்தாஜி வாக், சின்னமலை ஆகியோரது குழுவின் பட்டக்காரர்களையும்,அவர்களுக்கு உறுதுணையாக இருந்த வெள்ளாளர்களை Military Sudra! Ruffians! திருடர்கள் என்றெல்லாம் சொல்லும் கிழக்கிந்திய கம்பெனி பிரீமேசானிய திருடன்.




1799இல் சின்னமலை கவுண்டர்,தனது சமையல்காரனான தாராபுரம் அலங்கியம் செலாம்பாளையம் பரஞ்சேர்வழி பயிர கோத்திரத்தவனான நல்லப்பனால் காட்டிக்கொடுக்கப்பட்டு ,தனது மைத்துனனான உலகபுரம் உலகுடையார் மற்றும்   ஓடாநிலைக்கு  எழுமாத்தூர்,நசியனூர் மற்றும் காஞ்சிக்கோயில் பட்டக்காரர்களால் ஆதரிக்கப்பட்டார்.சின்னமலைக்கு ஓடாநிலை வேட்டுவரின் காணியாட்சி விலைக்கு பெறப்பட்டு பட்டறை அமைத்துக் கொடுக்கப்பட்டு 1804 வரை யுத்தத்தைத் தொடர்ந்தார்.துரோகி, கிழக்கிந்திய கம்பெனி ஆதரவுடன் 1798 முதல் நல்லப்பன் என்ற பரஞ்சேர்வழி பயிர கோத்திர சமையல்காரன், தனது பெயரை மாற்றிக்கொண்டு நல்லசேனாபதி சர்க்கரை உத்தமகாமிண்ட மன்றாடியார் என்று பெயரை வைத்துக்கொண்டு இலுமினாட்டியிடம் ஜமீன்தாரி எனும் கொடுங்கோல் கொள்ளை அதிகாரத்தைப் பெற்றான்:
http://kangayambull.org/the-heritage/
1798ஆம் வருடம் அவன், சின்னமலையை ஓடாநிலைக்குத் துரத்திவிட்டு,கிழக்கிந்திய  கம்பெனிக்கு போட்ட அடிமை கைபீது:








சர்க்காரின் தற்கால பதிப்பு:









Add caption















































































உண்மையான பட்டக்காரனான தீர்த்தகிரி சர்க்கரை உத்தமக்காமிண்ட மன்றாடியார் (தம்பா கவுண்டன் அல்லது தீரன் சின்னமலையின்) வாரிசுகள் ஓடாநிலை வெட்டுக்காட்டுவலசினர்.சின்னமலை,பழையகோட்டை பட்டக்காரராக பட்டம் சூட்டப்பட்டவர் என்ற உண்மை வரலாற்று கல்வெட்டுகள் இரண்டு கல்வெட்டுகள் இலுமினாட்டியால் பத்து வருடங்களுக்குள் திருப்பணி என்ற பெயரில் குறிவைத்து அழிக்கப்பட்டு விட்டன.கொங்கதேசத்தில் கல்யாணம் ஆனவர்கள் பட்டாபிஷேகம் செய்து,பட்டப்பெயருடன் பட்டக்காரராக முடியும் என்பதால்,சின்னமலை கல்யாணமானவரென தெரிகிறது.கட்டுரையாசிரியரின்  பெரிய அப்பிச்சியான புலவர் குழந்தை மற்றும் அப்பிச்சிமார் தியாகிகள் ராமசாமி கவுண்டர்,ஆறுமுக கவுண்டர் ஆகியோர் சின்னமலையின் பெண்வழி வாரிசுதாரர்கள்.அவர்களிடம் கேட்டதில் சின்னமலை தூக்கிலிடப்படவில்லை,கடைசியாக 1796இல் கைது ஆணை  பிறப்பிக்கப்பட்டது
அதன்பின் அவர் கருமலை (ஓட்டஞ்சத்திரம்) சென்றுவிட்டார் என்பது கன்னிவாடி துரோகி ஜமீனின் வழக்கு ஆவணங்கள் மூலம் உறுதியாகிறது. மேலும் 1797 வரையில்கூட அவர்கள் மைசூர் திப்புவிடம் சேரவில்லை என்பது உறுதியாகிறது:
"Most of these exhibits relate to the period anterior to 1801, and in many cases relate only to police duties. Among the latter duties may be instanced the attempts made to seize an outlaw named Tombu Gour for whose arrest a reward had been offered, referred to in Exhibit D3(a) under dates September 25th, December 16th 1796 and January 10th, 1797; and the Collector's warning on June 10th, 1795, to the palayagar in Exhibit D, which the palaya gar acknowledged in D4 on July 4th, 1795, against harbouring a rebel named Gopaya Naick; and the Assistant Collector's inayatnamah, Exhibit D6, dated July 25th, 1799, to the palayagar directing him to seize some marauders named Pujari Naick and Alwar Pillay, whom the Tahsildar had been endeavouring to capture by placing a guard of peons at the entrance of the Kannivadi district, as appears from the entry of January 18th, 1799, in Exhibit D2. The Assistant Collector's order of July 25th was acknowledged next day by the palayagar in Exhibit D7, in which he repudiates the idea that he has been friendly with these marauders, and on January 19th in Exhibit D2 he promises the Collector not to assist them."
தூக்கிலெல்லாம் இடப்பட்டதற்கு ஆதாரம் இல்லை என்றனர்.இலக்கிய சுவைக்காக அன்றிருந்த கர்ணபரம்பரை கதைகளை வைத்து தூக்கிலேற்றப்பட்டதாக குழந்தை எழுதிவிட்டார்.ஆனால் உண்மையில் எந்தவொரு வெள்ளையர் ஆவணத்திலும் அவ்வாறு இல்லை.  

ஜெயலலிதா போட்ட தீரன் சின்னமலை வரலாற்று குழுவின் தலைவர் யாரென்பதை பார்த்தால் அது எப்படி எழுதப்பட்டிருக்கும் என அறியலாம்:
இந்த எட்டப்பர்கள் எழுதிய கட்டபொம்மன் வகை சரித்திர புத்தகம் வெளியிடப்படுவதற்கு முன்னரே ஜெயலலிதா ஆட்சி கலைந்து, சின்னமலை சாபத்தால் சொத்து குவிப்பு வழக்கில் 1996இல் பதவியிழந்து,2016இல் உயிரையும் இழந்தார்.

ஆங்கில பிரீமேசானிய கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்த அதே நேரத்தில்,பிரெஞ்சு பிரீமேசானிய கிழக்கிந்திய கம்பெனி கையாளான  திப்புவையும் தீரன் எதிர்த்தார்.அவர் இந்த பிரிட்டிஷ்-பிரெஞ்சு சண்டை ஒரு பொம்மை நாடகம் என்பதை உணர்ந்திருந்தார் :
ஆனால் சில மேசானிய போலி சரித்திரவாதிகள் இதனை மறைத்து,தீரன் பிரெஞ்சிடம்,திப்புவிடம் கூட சேர்ந்து சண்டையிட்டான் என புளுகுகின்றனர்.
காங்கயம் லக்கய நாயக்கர் எனும் பாளையக்காரர் இவரது வலது கையாக இருந்துள்ளார் 




A.M.R.காலிங்கராயர் தனது சி்ன்ன மருமகனான போலி பழையகோட்டை வம்ச அர்ஜுனனை தி.கவின் பொருளாளராக வைத்து மதுரை தமுக்கம் மைதானத்தில் ராமசாமி நாய்க்கரோடு நாத்திக விஷ பிரச்சாரத்திலீடுபட்டபோது முத்துராமலிங்க தேவரது தொண்டர்களால் பல்லுடைக்கப்பட்டார்.மருமகனது விலாயெலும்பை மிதித்துடைத்தனர் தேவர் படையினர்.ஆறு மாதங்கள் சீப்பிடித்துப் புழுப்புழுத்து 23 வயதில் மாண்டான்.
வெள்ளையனைக்குக் காட்டிக்கொடுத்த இவர்களால்தான் வடநாட்டு அக்ரஹார பிராமணனாள்கள் கும்பினியில் வேலைவாய்ப்புப் பெற்றனர். அதனை இவர்களே எதிர்ப்பதுபோல நாடகம்.

பச்சைத் துரோகி 'பட்டக்காரர்!' ஒப்பாரி:

மீதமுள்ள கல்வெட்டை அழிக்க கட்டுரையாசிரியர் முயற்சியில் தடையாணை வாங்கப்பட்டுள்ளது: http://kongutemplejihad.blogspot.com






































பழையகோட்டை தீர்த்தகிரி சர்க்கரை வம்சாவளி வாழைத்தோட்டவலசு (ஓடாநிலை) உண்மை வம்சாவளியினர் 1899ஆம் ஆண்டு சிவன்மலை முன்மண்டபம் கட்டிய கல்வெட்டு (திருப்பணி என்ற பெயரில் குறிவைத்து அழிக்கப்பட்டுவிட்டது):



சக பட்டமாக வல்லியறச்சல் பில்ல கோத்திரத்து தொண்டைமான்.


ஆணூர்ச்சர்க்கரை பாண்டியனால் பட்டம்பெற்றது

ஆணூர் புரக்கவும் விக்கிரமன் கோட்டை யழிக்கச் சொட்டை 
வீணூர் புரக்கவும் உத்தம சோழனை வென்றனென்று 
தாணூர் புரக்கின்ற சர்க்கரை பாண்டியன் றந்தபட்டம் 
வாணோர் புரக்கக் கலிதடுத் தான்கொங்கு மண்டலமே.
       
கரியான் சர்க்கரை வெண்ணை மலையில் வீரர் குறும்படக்கியது


கரியான்சொற் சர்க்கரை பெற்றது முத்தமக் காமிண்டன்றான் 
குரியான சொட்டையில் வீரரை வென்று குறும்படக்கிச் 
சரியாய் நிறுத்திடும் வெண்ணைநன் மாமலைச் சார்பினிற்றான் 
வரிவாழை சூழ்ந்தனை வோர்களும் வாழ்கொங்கு மண்டலமே.


சர்க்கரை உத்தமச்சோழனை வென்று மதிற்கரை காத்தது

நதிக்கொளுங் கொல்லியி ரசவாத கங்கையி னாகபடம் 
ஒதுக்கிய பாசையி லுத்தமக் காமனை யொன்னலரை 
அதக்கிய வேல்சொட்டை யாணூர்ப் பவுதையு மன்னக்கொடி 
மதுக்கரை சூழ்ந்தனை வோர்களும் வாழ்கொங்கு மண்டலமே.

சர்க்கரை விசயனகர்ச் சர்க்கரை யெனப் பெயர் பெற்றது

விக்கிரமன் கோட்டை யழித்திடும் கொற்ற விசயநகர்ச் 
சர்க்கரை யென்றவன் வந்துதித் தான்றரு காரைநகர் 
கைக்கரச் கொட்டையில் வீரர் கதறக் கதறக்குத்தி 
வைக்கவுஞ் சர்க்கரை யுத்தமக் கோன்கொங்கு மண்டலமே.

காங்கயநாடு ஊர்த்தொகை:

காங்கய தாலுகா - காங்கய நாடு - மூன்று சமஸ்தானங்கள் / நான்கு பட்டங்கள்:





3 comments:

  1. நான் படித்து விட்டேன் தொடர்பு கொள்க ராஜா பாலமேடு

    ReplyDelete
  2. இது எழுதியவர்கள் நம்பர் போடுங்கள்

    ReplyDelete